“மனைவிக்கு மது ஊற்றி கொடுத்து; மகனின் கண்முன்னே” நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கணவர் கைது!

 

“மனைவிக்கு மது ஊற்றி கொடுத்து; மகனின் கண்முன்னே” நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கணவர் கைது!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 25 வயது பெண்ணிற்கு அந்த பெண்ணின் கணவரே மது கொடுத்து தனது நண்பர்களுடன் அந்த பெண்ணை கூட்டு  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

“மனைவிக்கு மது ஊற்றி கொடுத்து; மகனின் கண்முன்னே” நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கணவர் கைது!

இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் படி, “என்னையும் என் இரு குழந்தைகளையும் என் கணவர் புதுக்குறிச்சி கடற்கரை அருகேயுள்ள ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு எனக்கு மதுகொடுத்து என 5 வயது மகன் கண்முன்னே தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து என்னை வன்கொடுமை செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் அவரின் கணவர் மற்றும் அவரின் நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

“மனைவிக்கு மது ஊற்றி கொடுத்து; மகனின் கண்முன்னே” நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கணவர் கைது!

இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாதிக்கப்பட்ட பெண், ” என் கணவர் என்னை பல முறை துன்புறுத்தியுள்ளார். அவர் நண்பர்களிடம் பணம் வாங்கி கொண்டு தான் இந்த செயலில் ஈடுபட்டார். நான் அங்கிருந்து தப்பித்து சாலைக்கு சென்றேன். அப்போது அந்த வழியே வந்த ஒருவர் என்னை காப்பாற்றி அவரின் வீட்டுக்கு அழைத்து சென்றதுடன் போலீசுக்கும் தகவல் கொடுத்தார்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.