சென்னையில் 24 வயது இளைஞர் கொரோனாவால் பலி : மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில மணிநேரங்களில் நேர்ந்த பரிதாபம்!

 

சென்னையில் 24 வயது இளைஞர் கொரோனாவால் பலி : மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில மணிநேரங்களில் நேர்ந்த பரிதாபம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 24 வயது இளைஞர் கொரோனாவால் பலி : மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில மணிநேரங்களில் நேர்ந்த பரிதாபம்!

நேற்று மட்டும் 69 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 18 பேர் தனியார் மருத்துவமனையிலும், 51 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 76,158 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 24 வயது இளைஞர் கொரோனாவால் பலி : மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில மணிநேரங்களில் நேர்ந்த பரிதாபம்!

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சேர்க்கப்பட்ட ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 9 ஆம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சில மணிநேரங்களில் உயிரிழந்தார். மறுநாளான நேற்று அவரது சோதனை முடிவுகள் வெளியானது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அதேபோல், சென்னையைச் சேர்ந்த 30 வயது இளைஞரும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே உயிரிழந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண்ணும் கொரோனா காரணமாக பலியாகியுள்ளார்.