“அந்தரங்க விஷயங்களை ஆன்லைனில் பகிர்ந்த பெண் ” -பதிவு செய்த வாலிபர் ப்ளாக் மெயில் செய்யும் கொடுமை

 

“அந்தரங்க விஷயங்களை ஆன்லைனில் பகிர்ந்த பெண் ” -பதிவு செய்த வாலிபர் ப்ளாக் மெயில் செய்யும் கொடுமை

ஒரு கல்லூரி மாணவி ஆன்லைனில் பழகிய ஒரு வாலிபரிடம் தன்னுடைய பல அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொண்டதால் ,இப்போது அந்த வாலிபரால் தினம் தினம் ப்ளாக்மெயில் செய்யப்படுகிறார் .


குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ராகியில் வசிக்கும் பைசல் பதான் என்ற வாலிபரோடு ஒரு முதுகலை மாணவி இன்ஸ்டாக்ராமில் பழகினார் .அப்போது இருவரும் மிகவும் அன்னியோன்யமாக பல அந்தரங்க விஷயங்களையெல்லாம் பேசி அரட்டையடித்து வந்துள்ளார்கள் .அப்போது அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் பேசுவதையெல்லாம் ரெக்கார்ட் செய்து வைத்துள்ளார் .
அதன் பிறகு அந்த வாலிபர் அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பியுள்ளார் .அதனால் அவரின் வீட்டிற்கு தன்னுடைய பாட்டி மற்றும் சில உறவினர்களை அனுப்பி பெண் கேட்டுள்ளார் .ஆனால் அப்போது அந்த பெண் அவரை கல்யாணம் செய்ய மறுத்துள்ளார் .இதனால் பதான் அந்த பெண் மீது கடும் கோபம் கொண்டார் .அதனால் அவர் அந்த பெண்ணிடம் பேசிய பல அந்தரங்க விஷயம் அடங்கிய வீடியோவை ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார் .மேலும் தன்னை கல்யாணம் செய்து கொள்ளவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார் .அதனால் அந்த பெண் அநத பதான் மீது போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபர் பதானை கைது செய்தார்கள்

“அந்தரங்க விஷயங்களை ஆன்லைனில் பகிர்ந்த பெண் ” -பதிவு செய்த வாலிபர் ப்ளாக் மெயில் செய்யும் கொடுமை