சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 24 பேர் பலி!

 

சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 24 பேர் பலி!

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இருப்பினும் இந்த மாத தொடக்கத்திலிருந்து பாதிப்பு பன்மடங்கு உயர்ந்ததோடு உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 24 பேர் பலி!

இந்த நிலையில் சென்னையில் ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 24 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி, ஓமந்தூரார்,ஸ்டான்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உயிரிழப்புகள் தொடருவது சென்னைவாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.