‘அச்சுறுத்தும் நிவர் புயல்’: சென்னை விமான நிலையத்தில் 24 விமான சேவைகள் ரத்து!

 

‘அச்சுறுத்தும் நிவர் புயல்’: சென்னை விமான நிலையத்தில் 24 விமான சேவைகள் ரத்து!

சென்னையில் இருந்து 300 கி.மீ தொலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் நிவர் புயல், அதிதீவிரமாக மாறி நள்ளிரவு கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பேருந்து, ரயில் என அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

‘அச்சுறுத்தும் நிவர் புயல்’: சென்னை விமான நிலையத்தில் 24 விமான சேவைகள் ரத்து!

அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மங்களூரு, விஜயவாடா, கண்ணூர், ஹூப்ளி, கோழிக்கோடு, தூத்துக்குடி, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 12 விமான சேவைகளும், அங்கிருந்து சென்னைக்கு வரும் 12 விமான சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது.

‘அச்சுறுத்தும் நிவர் புயல்’: சென்னை விமான நிலையத்தில் 24 விமான சேவைகள் ரத்து!

முதற்கட்டமாக 24 விமான சேவைகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், புயலின் நிலவரத்துக்கு ஏற்ப பல விமான சேவைகள் ரத்து செய்யப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு செய்திருந்த பயணிகள் ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள் குறித்து விமான நிலையத்திடம் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.