24 மணிநேரமும் மருமகளை ‘ஒத்த’ வார்த்தையில் வசைபாடிய மாமியார் கொலை ! தாய் வீட்டில் தஞ்சமடைந்த மருமகள் கைது !

 

24 மணிநேரமும் மருமகளை ‘ஒத்த’ வார்த்தையில் வசைபாடிய மாமியார்  கொலை ! தாய் வீட்டில் தஞ்சமடைந்த மருமகள் கைது !

திருவண்ணாமலை அருகே மாமியார் எந்நேரமும் ஆபாச வார்த்தைகள் பேசி திட்டியதால் கோவம் அடைந்த மருமகள் அவரை கொன்றுவிட்டு தலைமறைவானார்.

சித்தாலபாக்கத்தில் வசிக்கும் முனியம்மாள் என்பவரின் மகன் வெங்கடேசனுக்கும் ஜோதி என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். 2 பேரக்குழந்தைகள், மகன், மருமகள் என வீட்டிலேயே வசித்து வந்தார் முனியம்மாள்.

Tiruvannamalai Mother in Law Murder

மாமியாருக்கும், மருமகளுக்கும் அடிக்கடி ஏற்பட்டு வந்த சண்டை காவல்நிலையம் வரை சென்றுவிட்டது. இவர்களுக்கு ஏற்படும் சண்டையை வழக்கு எதுவும் பதியாமல் அவ்வப்போது போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்னர் மாமியாருக்கும், மருமகளுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. மாட்டை ஒழுங்காக கட்டவில்லை என வம்பிழுத்த முனியம்மாளுடன் சரிக்கு சமமாக ஜோதியும் சண்டை போட்டுள்ளார். மேலும் ஜோதியை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மருமகள் ஜோதி நள்ளிரவில் கொதிநீரை தூங்கிக் கொண்டிருந்த மாமியார் முனியம்மாள் மீது ஊற்றியுள்ளார். சுடுநீரின் வெப்பம் தாங்க முடியாமல் முனியம்மாள் அலறி அடித்து எழுந்தார். இதனால் பயந்து போன ஜோதி அருகில் இருந்த இரும்புக் கம்பியால் தலையில் ஓங்கி அடித்தில் சம்பவ இடத்திலேயே மாமியார் உயிரிழந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தந்த தகவலின் பேரில் வாலாஜாபாத்தில் அம்மா வீட்டிற்கு தப்பி சென்ற ஜோதியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாயை இழந்த வெங்கடேசன் தற்போது மனைவியும் சிறைக்கு சென்றுவிட்டதால் குழந்தையுடன் தனிமரமாகி கோர்ட்டுக்கும், காவல் நிலையத்திற்கும் அலைந்து கொண்டிருக்கிறார்.