மோடியை வைத்து திமுக வேட்பாளர்கள் போடும் பழைய கணக்கு

 

மோடியை வைத்து திமுக வேட்பாளர்கள் போடும் பழைய கணக்கு

தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுவதாக சொல்லி வருகின்றனர் திமுகவினர். அதனால் பிரதமர் மோடி தாமரைக்கும், இலைக்கும் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தால் உதயசூரியன் சின்னத்தில்தான் ஓட்டு விழும் என்று பழைய கணக்கை போடுகின்றனர் திமுக வேட்பாளர்கள் சிலர்.

மோடியை வைத்து திமுக வேட்பாளர்கள் போடும் பழைய கணக்கு

கடந்த நாடாளூமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பினால்தான் திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைத்தது என்று நம்பும் திமுக வேட்பாளர்கள், அதிமுக – பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தால், பாஜகவின் மீது வெறுப்பினால் திமுகவுக்கு வாக்கு வந்து சேரும் என்று சொல்கின்றனர்.

தாராபுரத்தை தொடர்ந்து மதுரை, கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்து வரும் மோடியை தங்கள் தொகுதிக்கும் வருமாரு அழைப்பு விடுக்கின்றனர். ஒருவகையில் பிரதமர் மோடியை கலாய்த்துதான் இந்த அழைப்பினை விடுக்கிறார்கள்.

’அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி சார், தாம்பரம் தொகுதிக்கு வந்து டிகேஎம் சின்னையாவை ஆதரித்து பிரச்சாரம் செய்யுங்க. அவரை எதிர்த்து நான் நிற்கிறேன். உங்க பிரச்சாரம் எனது வெற்றிக்கு பெரு உதவியாக இருக்கும். நன்றி சார்’’ என்கிறார் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா.

ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் ஆர்.காந்தி, தருமபுரி திமுக வேட்பாளர் தடங்கம் சுப்ரமணி ஆகியோரும் இதையே தெரிவித்துள்ளனர்.

திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனும் இதையே தெரிவித்துள்ளார்.