திமுகவிற்கு வாக்கு சேகரித்த சீமான்! நாம் தமிழர் அதிர்ச்சி!

 

திமுகவிற்கு வாக்கு சேகரித்த சீமான்! நாம் தமிழர் அதிர்ச்சி!

234 தொகுதிகளிலும் நாம்தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

திமுகவிற்கு வாக்கு சேகரித்த சீமான்! நாம் தமிழர் அதிர்ச்சி!

தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க தமிழகம் முழுவதும் சுற்றி வாக்கு சேகரித்துவிட்டு, தனது சொந்த தொகுதியான திருவொற்றியூரில் வாக்கு சேகரித்து வருகிறார் சீமான்.

திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட எர்ணாவூரில் பிரச்சாரம் செய்தபோது, ’’என் அன்பிற்குரிய சொந்தங்கள்.. என் அருமை உடன்பிறந்தார்கள்.. பெருங்கனவுகளோடு நிற்கின்ற எளிய மக்களான உங்களின் இந்த பிள்ளைக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு செலுத்துங்கள்..’’என்று சொன்னவர், அதைக்கேட்ட நாம் தமிழர் அதிர்ச்சியானதை பார்த்து, சின்னத்தை மாற்றி சொல்லிவிட்டோம் என்பதை உணர்ந்து உடனே, ‘’விவசாயி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’’ என்று வேண்டினார்.

தொடர் பிரச்சாரம் தந்த அயற்சியில் தடுமாறி அப்படி சீமான் பேசியதை, திமுகவினர் பிடித்துக்கொண்டனர். தங்கள் கட்சிக்கு சீமான் ஓட்டு கேட்பதாக சித்தரித்து, ‘அண்ணன் சீமான் ஆதரவு பெற்ற உதயசூரியன்’ என்று அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.