’’உன் அப்பன் என்னடா பண்றான் காலுக்கு கீழ…’’

 

’’உன் அப்பன் என்னடா பண்றான் காலுக்கு கீழ…’’

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் கூவத்தூரில் நடந்த அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக்கூட்டத்திற்கு பின்னர், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்தார் சசிகலா. அவர் அறிவித்ததும், எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் காலில் விழுந்து வணங்கி நன்றி தெரிவித்தார்.

’’உன் அப்பன் என்னடா பண்றான் காலுக்கு கீழ…’’

அதிலிருந்து திமுகவினர்..குறிப்பாக உதயநிதிஸ்டாலின், ஊர்ந்து சென்று முதல்வர் ஆனவர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கெல்லாம் உச்சபட்சமாக, ‘’கொஞ்சம் விட்டிருந்தா சசிகலாவின் காலுக்குள் புகுந்திருப்பாரு…’’என்று பேச, திமுகவின் பெண் நிர்வாகிகளே உதயநிதியை கடுமையாக சாடினார்கள். பிரபல மருத்துவரும், எழுத்தாளருமான ஷாலினி உள்ளிட்ட பலரும் உதயநிதிக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இதன் பின்னர் கொஞ்ச நாளைக்கு அமைதியாக இருந்தார் உதயநிதி. ஆ.ராசா, திண்டுக்கல் லியோனி என்று வரிசையாக பெண்கள் பற்றி இழிவாக பேசி வரும் தெம்பில், மீண்டும் அந்த விவகாரத்தினை கையில் எடுத்திருக்கிறார்.

’’உன் அப்பன் என்னடா பண்றான் காலுக்கு கீழ…’’

நேற்றை அவினாசி பிரச்சாரத்தில் பேசியபோது, சசிகலாவின் காலில் விழுந்து வணங்கும் முதல்வரின் போட்டோவை காட்டி, ‘’சசிகலாவின் நாற்காலிக்கு கீழே எப்படி படுத்து கிடக்கிறார் பாருங்கள் எடப்பாடி. நாற்காலிக்கு கீழே வெற்றி நடைபோடுகிறது தமிழகம்’’ என்று சொல்லி சிரித்தார் உதயநிதி.

இதற்கு ஆதரவு தெரிவித்து திமுகவினர் பலரும் சமூக வலைத்தளத்தில் கமெண்ட் போட, இதனால் கடுப்பான அதிமுக தொண்டர் எஸ்.பாலமுருகன், கருணாநிதியின் மூன்றாவது மனைவி ராஜாத்தியின் காலில் விழுந்து வணங்கும் ஸ்டாலின் படத்தை போட்டு, ’’உன் அப்பன் என்னடா பண்றான் காலுக்கு கீழ…’’என்று கேட்கிறார்.

உடனே, விஸ்வநாத் ஜெயராஜ் என்கிற திமுக தொண்டர், ‘’தாயுடைய காலில் விழுவதும் டயர்களில் விழுந்து வணங்குவதும் ஒன்றா? முதுகெலும்பு இல்லாதவர்கள்… அந்த அம்மையார் நல்லாதான் இவர்கள் எல்லாரையும் பேசாம வைத்திருந்தது’’என்று ஆவேசமாகிறார்.

அதிமுகவினரும் சளைக்காமல், ‘’ஸ்டாலினுக்கு எப்படி ராஜாத்தி சின்னம்மாவோ, அப்படித்தான் முதல்வருக்கு சசிகலா சின்னம்மா’’என்கிறார்கள்.