’’ஆட்டுக்கு பதிலாக திமுக வேட்பாளர்களை வெட்டி பிரியாணி போடுவோம்’’-கோவையை சூடாக்கிய ‘நமது அம்மா’சந்திரசேகர்

 

’’ஆட்டுக்கு பதிலாக திமுக வேட்பாளர்களை வெட்டி  பிரியாணி  போடுவோம்’’-கோவையை சூடாக்கிய ‘நமது அம்மா’சந்திரசேகர்

அதிமுக கோவை புறநகர் மாவட்டம் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மற்றும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’நாளிதழின் வெளியீட்டாளர் வடவள்ளி சந்திரசேகர். இவர் தொண்டாமுத்தூர் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது,

’’ஆட்டுக்கு பதிலாக திமுக வேட்பாளர்களை வெட்டி  பிரியாணி  போடுவோம்’’-கோவையை சூடாக்கிய ‘நமது அம்மா’சந்திரசேகர்

‘’ஸ்டாலினுக்கு சொல்கிறேன்..கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கும் ஒவ்வொரு ஆட்டை அனுப்பி வைத்துள்ளாய். அந்த ஆடுகளை கண்டிப்பாக இந்த தேர்தல் முடிந்தவுடன் வெற்றிவிழாவுக்காக எல்லா தொகுதிகளிலும் நாங்கள் கிடாவெட்டி விருந்து வைப்போம். அந்த கிடாவெட்டு அன்று ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு ஆட்டை கம்பியாகத்தான் வாங்குவோம். அந்த ஒரு ஆடு நீ அனுப்பியிருந்த ஆட்டைத்தான் வெட்டுவோம். கண்டிப்பாக நீ எழுதி வைத்துக்கொள்ள வேண்டியதுதான். எல்லா ஆடுகளையும் திலகா அக்காவை வைத்து பிரியாணி செய்து கோயம்புத்தூரில் போட்டு அனுப்பவில்லை என்றால் கேளு. நீ அதற்கப்புறம் கேளு.. வேலுமணி அமைச்சர் யாருன்னு?’’ என்று பேசிபரபரப்பை ஏற்படுத்தினார்.

’’ஆட்டுக்கு பதிலாக திமுக வேட்பாளர்களை வெட்டி  பிரியாணி  போடுவோம்’’-கோவையை சூடாக்கிய ‘நமது அம்மா’சந்திரசேகர்

இந்த பேச்சு வீடியோ வைரலாகி வந்ததால், திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சிவசுரேஷ், தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை வெட்டி கொலை செய்து பிரியாணி போடப்போவதாக பலர் முன்னிலையில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால், தொண்டாமுத்தூர் தேர்தல் அலுவலர் செந்தில் அரசன் அனுப்பிய புகாரையும் ஏற்று, சந்திரசேகர் மீது 294(பி), 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழ்க்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

’’ஆட்டுக்கு பதிலாக திமுக வேட்பாளர்களை வெட்டி  பிரியாணி  போடுவோம்’’-கோவையை சூடாக்கிய ‘நமது அம்மா’சந்திரசேகர்