‘’இந்த முறையும் தோற்றுவிட்டால் என்னை உயிருடன் பார்க்க முடியாது’’

 

‘’இந்த முறையும் தோற்றுவிட்டால் என்னை உயிருடன் பார்க்க முடியாது’’

இதுதான் எனக்கு கடைசி தேர்தலாக இருக்கும்… என்ற அஸ்திரத்தை எடுத்து வந்தார் கருணாநிதி. மரணத்தை நினைத்தாவது அனுதாபப்படுவார்கள் என்றுதான் அந்த அஸ்திரத்தை எடுத்து வந்தார் கருணாநிதி. அவரது கட்சி வேட்பாளரும் அதே மரண அஸ்திரத்தை எடுத்திருக்கிறார்.

‘’இந்த முறையும் தோற்றுவிட்டால் என்னை உயிருடன் பார்க்க முடியாது’’

விராலிமலை தொகுதி மக்களுக்கு அவ்வப்போது கிப்ட் கொடுத்து தனது செல்வாக்கினை கெத்தாக வைத்திருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். அதனால் அவருக்கு எதிராக களமிறங்கியிருக்கும் திமுக வேட்பாளர்பழனியப்பன் திணறிக்கொண்டிருக்கிறார்.

‘’ரெண்டு முறை தோற்றுவிட்டேன். இந்த முறையும் தோற்றுவிட்டால் என்னை உயிருடன் பார்க்க முடியாது’’என்று சொல்லிவிட்டு கண்ணீர் சிந்தி வாக்குகள் சேகரித்து வருகிறார்.

‘’இந்த முறையும் தோற்றுவிட்டால் என்னை உயிருடன் பார்க்க முடியாது’’

விஜயபாஸ்கருக்கு ஆதரவாக அவரது இரண்டு மகள்களும் வாக்குகள் சேகரித்து வருவதால், பழனியப்பனின் மகளும் அப்பாவுக்காக வாக்குகள் சேகரித்து வருகின்றார்.

‘’நான் இப்ப எம்.பி.பி.எஸ். மூன்றாவது வருசம் படிக்கிறேன். படிப்பு முடிஞ்சதும் டாக்டராகி இந்த தொகுதி மக்களுக்கு இலவசமா சிகிச்சை அளிப்பேன். இந்த தொகுதி முழுவதும் இலவச கிளினிக் அமைக்கணுங்கறதுதான் அப்பாவோட ஆசையும்’’ என்று சொல்லி வாக்குகள் சேகரித்து வருகிறார்.