234 தொகுதி மக்களின் ஒரே மனநிலை!
Mar 27, 2021, 07:23 IST1616809982000
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு டாப் தமிழ் நியூஸ் இணையத்தின் சார்பாக தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் கள நிலவரம் அறிய நமது குழுவினர் பயணம்செய்தபோது, அனைத்து தொகுதி மக்களும், குடிநீர் பிரச்சனை, சாக்கடை பிரச்சனை, குப்பை பிரச்சனை என்றுதான்சொல்கிறார்கள். 234 தொகுதி மக்களிடையேயும் இதுதான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் கமலஹசானும் இதுகுறித்துதான் தனது விரக்தியை தெரிவித்துள்ளார். அவர், ’’தமிழகமெங்கும் ஒரே மாதிரியான பிரச்சனைகள்தான். குடிநீர் இல்லை, பாதாள சாக்கடை பிரச்சனை, குப்பை அள்ளுவதில்லை, நீர்நிலைகள் மாசுபாடு, சாலைகள் மோசம், சுகாதார நிலையங்கள் இல்லை. அரை நூற்றாண்டாகியும் இவற்றைக் கூட சரி செய்யாதவர்கள்,இனி எப்போது செய்வார்கள்?’’என்று கேட்கிறார்.