ராஜாக்களின் பேச்சுக்களையும், சேகர்களின் உடலசைவுகளையும்… வெடிக்கும் திருமுருகன் காந்தி
‘வீழட்டும் பாஜக அதிமுக’ என்று திமுக அணியினருக்கு ஆதரவாக மே17 இயக்கம் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ள மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கூட்டணியினர் போட்டியிடும் தொகுதிகளில் பாஜக, அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.
திராவிடம் இல்லா தமிழ்நாடுன்னு உன்னால சொல்லமுடியும்னா, பாஜக இல்லா தமிழ்நாடுன்னு எங்களால செஞ்சு காட்ட முடியும். பாஜக என்கிற வடநாட்டு கட்சி தமிழ்நாட்டில் கால் ஊன்ற எந்தத் தன்மானத் தமிழனும் இடமளிக்கமாட்டான் என்று ஆவேசம் காட்டுகிறார் திருமுருகன் காந்தி.
மக்களைச் சந்தித்தோம். மக்களிடம் பேசினோம். இடர்களை எதிர்கொண்டாலும் இன எதிரியை வீழ்த்துவதில் குறியாய் நிற்போம். பாஜகவிற்கு எதிரான பிரச்சாரத்தில் கைகோர்க்க வாருங்கள் என்று பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களும் வழங்கி வருகின்றனர் மே-17 இயக்கத்தினர் . தமிழ்நாடு முழுவதுமான பாஜக, அதிமுகவிற்கு எதிரான பிரச்சாரத்தில் மே17 இயக்கத்தோடு கைகோர்க்க வாருங்கள். பங்கேற்க விரும்புகிறவர்கள் பின்வரும் எண்ணிற்கு அழைப்பு வாயிலாகவோ, வாட்சப்-டெலிகிராம்-சிக்னல் செயலி வழியாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று 98848 64010, 94443 27010 இப்படியெல்லாம் பாஜக – அதிமுகவுக்கு எதிராக மக்களை திரட்ட முயற்சித்து வருகிறார்கள்.
மருத்துவரும், அரசியல் விமர்சகருமான சுமந்த்ராமன், ‘’the faith of another& mocks beliefs of Hindus has been given a DMK ticket. மற்றவரின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் பேசும் ஒரு நபர்,இந்து மத கடவுள்களை கேவலமாக சித்தரிப்பவர். இவருக்கு DMK டிக்கெட் கொடுத்திருக்கிறது. நியாயப்படுத்த முடியாது’’ என்று ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
சமூகநீதி மருத்துவரை எழினைக் கண்டால் சனாதன மருத்துவருக்கு(சுமந்த்ராமன்) எரிச்சல் வரும் தானே? சமஸ்கிருதம் தெரிந்தவரே டாக்டராகலாமெனும் விதியை மாற்றி சாமானியரும் மருத்துவராகி, சட்டசபைக்கும் செல்வதை சனாதனிகளால் சகிக்கமுடியுமா? மருத்துவம் படித்தாலும் மண்டைக்குள் சாக்கடையே ஓடுகிறது என்று சாடுகிறார் திருமுருகன் காந்தி.
மேலும், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் திமுகவின் இந்து விரோத போக்கினை கடுமையாக விமர்சித்து வருவதற்கு, ‘’இவர்களது பாட்டன்கள், நம் பாட்டன்களை எவ்வளவு தூரம் அவமானப்படுத்தி இருப்பார்கள் என்பதை அறிய வரலாறை தோண்ட வேண்டியதில்லை. சுமந்த்ராமன்களின் ட்வீட்களையும், ராகவன்களின் முகத்தையும், ராஜாக்களின் பேச்சுக்களையும், சேகர்களின் உடலசைவுகளையும் கவனித்தாலே போதுமானது’’ என்கிறார் திருமுருகன் காந்தி.