கொரோனாவின் கோரத்தாண்டவம்..சென்னையில் ஒரே நாளில் 23 பேர் உயிரிழப்பு!

 

கொரோனாவின் கோரத்தாண்டவம்..சென்னையில் ஒரே நாளில் 23 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நேற்று புதிதாக 3,509 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70,977 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் தான் அதிக அளவு பாதிப்பும் உயிரிழப்பும் ஏற்படுகிறது. சென்னையில் மட்டுமே கிட்டத்தட்ட 46,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையாகச் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் கோரத்தாண்டவம்..சென்னையில் ஒரே நாளில் 23 பேர் உயிரிழப்பு!

இந்த நிலையில் சென்னையில் ஒரே நாளில் 23 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 6 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேரும் கே.எம்.சி மருத்துவமனையில் 4 பேரும் மற்ற மருத்துவமனைகளில் 9 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.