முதல்வர் இன்று போட்ட சவால்! நாளை ஸ்டாலின் ஏற்பாரா?

 

முதல்வர் இன்று போட்ட சவால்! நாளை ஸ்டாலின் ஏற்பாரா?

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 23 தினங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் செம சூடு பிடித்திருக்கிறது. தொகுதிப்பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என்ற பரபரப்பு முடிந்து இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு தயாராகிவிட்டார்கள்.

முதல்வர் இன்று போட்ட சவால்! நாளை ஸ்டாலின் ஏற்பாரா?

கடந்த டிசம்பர் மாதமே தேர்தல் பிரச்சாரத்தினை சேலத்தில் தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீடு மற்றும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்த பின்னர், இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின், தனது ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சாரங்களின் போது, தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ’’ஒரே மேடையில் துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலினுடன் விவாதிக்க நான் தயார்’’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார்.

முதல்வர் இன்று போட்ட சவால்! நாளை ஸ்டாலின் ஏற்பாரா?

தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஸ்டாலினிடம் தனியாக விவாதிக்க தயார். அதேபோல் ஸ்டாலின் தயாரா? என்றும் சவால் விடுத்திருக்கிறார்.

இந்தியா டுடே குழுமம் நடத்திய கருத்தரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த சவாலை விடுத்திருக்கிறார்.

மேடைக்கு மேடை வாய்க்கு வந்தபடி அதிமுக பற்றி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதால், நேருக்கு நேர் விவாதிக்கலாமா? என்று முதல்வர் சவால் விடுத்தபோது, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்று ஸ்டாலின் விவாதத்திற்கு வர சாக்கு தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பேசும் போது மீண்டும் விவாத்திற்கு அழைத்தார். இதற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் எந்த பதிலும் அளிக்காத நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இந்தியா டுடே குழுமம் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டார். அப்போது, ஒரே மேடையில் ஸ்டாலினுடன் துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்க தயார் என்று தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினை நேரடியாக விவாத்திற்கு இதுவரை 4 முறை அழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் இன்று போட்ட சவால்! நாளை ஸ்டாலின் ஏற்பாரா?

தி.மு.க தலைவர் ஸ்டாலின் இந்தியா டுடே கருத்தரங்கில் நாளை கலந்து கொள்ளவிருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினை தனி விவாதத்திற்கு அழைத்தது குறித்து, ஸ்டாலினிடமே முன் வைக்கப்படும் என இந்தியா டுடே தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் ராகுல் கன்வால் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் சவாலுக்கு என்ன சொல்லப்போகிறார் ஸ்டாலின். சவாலை ஏற்பாரா? இல்லை மழுப்புவாரா? என்ற பரபரப்பு இரு கட்சியினரிடையேயும் ஏற்பட்டிருக்கிறது.