கருப்பு-நீல-சிவப்பு சட்டைகளே மீண்டும் வெல்லும் – திருமுருகன் காந்தி முழக்கம்

 

கருப்பு-நீல-சிவப்பு சட்டைகளே மீண்டும் வெல்லும் – திருமுருகன் காந்தி முழக்கம்

அறவழிப் போரட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்கக்கோரி திருச்சியில் மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க பேரணி மாநாடு நடைபெற்றது.

கருப்பு-நீல-சிவப்பு சட்டைகளே மீண்டும் வெல்லும் – திருமுருகன் காந்தி முழக்கம்

திருச்சியில் உழவர் திடலில் நடந்த கூட்டத்தில், எட்டுவழிச்சாலை, மீத்தேன், ஸ்டெர்லைட், கூடன்குளம், நீட், CAA, ஈழம், தாதுமணல், ஜல்லிக்கட்டு, டாஸ்மாக், கெயில், உழவர், ஒக்கி, ஜாதியம்.. என ‘போராடும் மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை இரத்து செய்யக்கோரி’ அனைத்து மக்கள் இயக்கங்களும் ஒன்றுகூடிய மாநாடு, மே17 இயக்கத் தோழர்களின் பறை முழக்கத்துடனும், மக்கள் கலைஞன் தோழர்.கோவனின் கம்பீர குரலோடு துவங்கியது.

இந்த மாநாடுகுறித்து மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, ‘’கொள்கையடிப்படையில் எதிர்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் இது.
ஆரிய-திராவிட போராட்டம். ஆரியவர்த்தத்திற்கும்-தமிழ்த்தேசியத்திற்குமான போராட்டம். வைதீகத்திற்கு எதிரான அவைதீகத்தின் போராட்டம்.
ஆதிக்கத்திற்கு எதிரான அறத்தின் போராட்டம்.

கருப்பு-நீல-சிவப்பு சட்டைகளே மீண்டும் வெல்லும் – திருமுருகன் காந்தி முழக்கம்

தனியார்மயத்திற்கு எதிரான பொதுவுடமைகளின் போராட்டம். மதவெறிமூடர்கள் கூட்டத்திற்கு எதிரான பகுத்தறிவுவாதிகள் போராட்டம். மார்வாடி பனியா ஆக்கிரமிப்பிற்கு எதிரான தமிழ் பாட்டாளியின் போராட்டம். கார்ப்பரேட்டுக்கு எதிரான உழவனின் போராட்டம். வணிகமயத்திற்கு எதிரான மாணவர்களின் போராட்டம்.

பாலியல் வன்முறைக்கு எதிரான பெண்களின் போராட்டம். இந்தி-சமஸ்கிருதத்திற்கு எதிரான தமிழின் போராட்டம். சுரண்டலுக்கு எதிரான தொழிலாளியின் போராட்டம். ஆக்கிரமிப்பிற்கு எதிரான மீனவர் போராட்டம். சூழலியல் கொள்ளையனுக்கு எதிரான நம்மாழ்வர்களின் போராட்டம்.
பாசிசத்திற்கு எதிரான சனநாயக ஆற்றல்களின் போராட்டம்.

இப்படியான கொள்கை போராட்டங்களில் எங்குமே மோடிக்கு எதிராக நிற்காத காங்கிரஸ் எப்படி பாஜகவை வீழ்த்த பயன்படும்? ராகுலின் மக்கள் சந்திப்பு நாடகத்தால் பாஜக வீழாது. கருப்பு-நீல-சிவப்பு சட்டைகளே இத்தத்துவ போராட்டத்தை நடத்தி 2019ல் வெற்றிவாகை சூட்டின. இக்கூட்டணியே போராடி மீண்டும் வெல்லும்’’ என்று முழக்கமிட்டிருக்கிறார்.