சசிகலா,தினகரனின் பலம் பற்றி ஈபிஎஸ் – ஓபிஎஸ்க்கு நன்கு தெரியும்- சி.டி.ரவி

 

சசிகலா,தினகரனின் பலம் பற்றி ஈபிஎஸ் – ஓபிஎஸ்க்கு நன்கு தெரியும்- சி.டி.ரவி

சசிகலா, டிடிவி தினகரனின் பலம் மற்றும் பலவீனம் பற்றி ஈபிஎஸ் – ஓபிஎஸ்க்கு நன்கு தெரியும். அதனால், அவர்கள் 2 பேரையும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி.

சசிகலா,தினகரனின் பலம் பற்றி ஈபிஎஸ் – ஓபிஎஸ்க்கு நன்கு தெரியும்- சி.டி.ரவி

சென்னை தி.நகர் கமலாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும், அதிமுக – பாஜக இடையே தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

அமமுகவினையும் கட்சியில் சேர்த்தால்தான் திமுகவை வெல்ல ஏதுவாக இருக்கும் என்றும், தென் மாவட்டங்களில் கணிசமான ஓட்டுக்களை பெற முடியும் என்றும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்சிடம் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். அவரது ஆதரவாளரான குருமூர்த்தியும் இது தொடர்பாக வலியுறுத்தி இருக்கிறார்.

ஓபிஎஸ் இதற்கு சம்மதித்தாலும் ஈபிஎஸ் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. தேர்தல் நெருக்கத்தில் இது தொண்டர்களிடையே குழப்பத்தினை ஏற்படுத்தும் ஈபிஎஸ் நினைப்பதாக தகவல்.

இந்நிலையில் சி.டி.ரவியும் அமித்ஷாவின் கருத்தினை வலியுறுத்தியுள்ளார். அதே நேரம் முடிவினை ஈபிஎஸ் – ஓபிஎஸ் வழிக்கே விட்டுள்ளார்.