இளைஞருடன் உல்லாசம்: பார்த்துவிட்ட கணவரை பிளாஸ்டிக் கவரால் கட்டி கொலை செய்த மனைவி

 

இளைஞருடன் உல்லாசம்: பார்த்துவிட்ட கணவரை பிளாஸ்டிக் கவரால் கட்டி கொலை செய்த மனைவி

திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில் மனைவி தேவி மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்தார் தண்டபாணி. இவர் தாராபுரத்தில் மனைவியுடன் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்துவந்தார். சமீப காலமாக வியாபாரம் முடிந்து தண்டபாணி மட்டும் கீரனூர் சென்று வந்தார். ஆனால், தேவி தாராபுரத்தில் உள்ள தனது அம்மா வீட்டிலேயே தங்கிக்கொண்டு வந்திருக்கிறார்.

இளைஞருடன் உல்லாசம்: பார்த்துவிட்ட கணவரை பிளாஸ்டிக் கவரால் கட்டி கொலை செய்த மனைவி

இந்த நிலையில் திடீரென்று, கடந்த 14ம் தேதி அன்று தேவி மட்டும் இரவில் கீரனூர் வீட்டுக்கு வந்ததால், அப்பா எங்கே என்று பிள்ளைகள் கேட்கவும், வெளியூற் சென்றிருப்பதாக கூறியுள்ளார். ஆனால், மறுநாள் காலையில் கீரனூர் காவல்நிலையம் சென்று, கணவரை காணவில்லை என்று புகார் கொடுத்திருக்கிறார்.

புகாரை அடுத்த போலீசாரும் தண்டபாணியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் போலீசாருக்கு தேவியின் மீது சந்தேகம் எழுந்தது. தேவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டார். அவர் சொன்னதை கேட்டு போலீசாரே ஆடிப்போய்விட்டனர்.

இளைஞருடன் உல்லாசம்: பார்த்துவிட்ட கணவரை பிளாஸ்டிக் கவரால் கட்டி கொலை செய்த மனைவி

‘’ஒருநாள் பழ வியாபாரத்தை முடிச்சுட்டு அம்மா வீட்டுக்கு போனேன். அப்ப பக்கத்து வீட்டு பையன் அபிஷேக்குடன் எனக்கு பழக்கமாச்சு. அவனுக்கு 19 வயசுதான் ஆகுது. அதுல இருந்து நான் தினமும் வியாபாரத்தை முடிச்சுட்டு அம்மா வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு, வீட்டுக்காரரை மட்டும் கீரனூருக்கு அனுப்பிடுவேன். இதுல அவருக்கு(தண்டபாணி) சந்தேகம் வந்திருக்குது. அதனால அன்னைக்கு அவர் கீரனூர் போறதா சொல்லிட்டு என்னைய பின் தொடர்ந்து வந்திருக்கிறாரு.

நானும் அபிஷேக்கும் உல்லாசமா இருக்குறத பார்த்திட்டாரு. எங்களை அடிக்க பாய்ஞ்சு வந்தாரு. நான் உடனே, ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து அவரோட முகத்துல போட்டு மூடிட்டேன். அப்புறம் ஒரு கம்பியை எடுத்து பிளாஸ்டி பையை எடுக்க முடியாதபடி கட்டிவிட்டேன். அதற்கு பிறகு கம்பியை எடுத்து சரமாரியாக அடித்தோம். அதுல அவர் செத்துட்டார். சடலத்தை ஒரு மூட்டையாக கட்டி பாழடைந்த கிணற்றுல வீசிட்டோம்’’என்று சொல்லி அதிரவைத்திருக்கிறார்.

தேவியின் வாக்குமூலத்தின்படி அவரையும், அபிஷேக்கையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.