ஸ்டாலினுக்கு திருமுருன்காந்தி கடும் கண்டனம்! ‘ரவுடிகள் பட்டியல்’விவகாரம்

 

ஸ்டாலினுக்கு திருமுருன்காந்தி கடும் கண்டனம்! ‘ரவுடிகள் பட்டியல்’விவகாரம்

திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டவிரோதிகள் தலைதூக்குவார்கள். ரவுடிகள், ஆட்டம் போடுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கோவை கொடிசியா அரங்கத்தில் நடந்த விழாவில் பேசினார். பிரதமர் மோடி திமுக மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசிய மு. க. ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

ஸ்டாலினுக்கு திருமுருன்காந்தி கடும் கண்டனம்! ‘ரவுடிகள் பட்டியல்’விவகாரம்

திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் ஆட்டம்போடுவார்கள் என்ற மோடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாஜகவில் சேர்ந்த ரவுடிகளின் பட்டியலை வெளியிட்டு, வாய்க்கு வந்தபடி திமுகவை எச்சரிக்கும் போக்கினை பிரதமர் மோடி கைவிட வேண்டு என்று எச்சரித்தார் ஸ்டாலின்.

ஸ்டாலின் வாசித்த ரவுடிகளின் பட்டியலில் இடம்பெற்ற குடந்தை அரசன், மே-17 இயக்கத்தின் களப்போராட்ட தோழர் அவார். இதனால் ஆத்திரம்கொண்ட மே-17 இயக்கம் திருமுருகன்காந்தி,

ஸ்டாலினுக்கு திருமுருன்காந்தி கடும் கண்டனம்! ‘ரவுடிகள் பட்டியல்’விவகாரம்

’’பெரியாரிய-அம்பேத்கரிய செயற்பாட்டாளர், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பின் முக்கிய தோழர், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர்.குடந்தை அரசன் அவர்களை ரவுடி பட்டியலில் இணைத்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பேசியது கண்டனத்திற்குரியது. அதிமுக அரசானது..இவ்வாறாக தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியல்களை சரி பார்க்காமல், அவசரகதியில் பொதுவெளியில் பதிவு செய்து முத்திரை குத்துவது பாஜகவிற்கு எதிராக போராடும் சனநாயக ஆற்றல்களை பலவீனப்படுத்தும். குடந்தை அரசன் எமது தோழர், எமது களப்போராட்ட தோழர். சாதிய-சனாதன எதிர்ப்பாளர்’’ என்று தெரிவித்திருக்கிறார்.