சசிகலா வீட்டில் இருக்கிறாரா? வெளியூர் சென்றுவிட்டாரா?

 

சசிகலா வீட்டில் இருக்கிறாரா? வெளியூர் சென்றுவிட்டாரா?

ஊடகங்கள் நேரலை செய்யும் அளவுக்கு பெங்களூரு முதல் சென்னை வரைக்கும் 23 மணி நேரம் தடபுடலான தடபுடலான வரவேற்புடன் வந்தார் சசிகலா. வழியில் ஆதரவாளர்களிடம் பேசியபோது, ’பொறுத்திருந்து பாருங்கள்..தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ என்று அதிரடி காட்டினார்.

சசிகலா வீட்டில் இருக்கிறாரா? வெளியூர் சென்றுவிட்டாரா?

சசிகலா வரும்போதே இப்படி அதிருதே இன்னும் அடுத்தடுத்த நாட்கள் தமிழகம் எப்படி இருக்குமோ? சரவெடியாக வெடிக்குமோ என்ற பரபரப்பு நிலவியது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் புஷ்வானம்தான்.

சந்திரமுகி மாதிரி வீட்டுக்குள் சென்றவர் வெளியே வரவே இல்லை. சமைப்பதற்கு வீட்டிற்குள்ளேயே சமையல்காரர் இருந்தாலும் வெளியே இருந்துதான் டிபன் கேரியரில் சாப்பாடு வருகிறது.

அவர் வீட்டுக்குள் இருக்கிறாரா இல்லையா என்று கட்சியினருக்கே சந்தேகம் வந்திருக்கிறது.

சசிகலா வீட்டில் இருக்கிறாரா? வெளியூர் சென்றுவிட்டாரா?

சில தினங்களுக்கு முன்பாக புதுச்சேரி பதிவு எண் கொண்ட காரும், கர்நாடக பதிவு எண் கொண்ட காரும் வீட்டின் முன்பாக நின்றிருந்ததால், அவர் வெளியூர் சென்றிருக்கலாம் என்றும் சிலர் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், சிறிதும், பெரிதுமாக சாப்பாடு கேரியரும், விவேக், வெங்கடேஷ் உள்ளிட்ட உறவினர்களும் அடிக்கடி வீட்டிற்குள்ளே சென்று வருவதால் சசிகலா வீட்டில்தான் இருக்கிறார் என்றும் சிலர் சொல்கின்றனர்.

வீட்டில் இருக்கிறாரா? இல்லையா? என்று பேசும் அளவுக்கு சசிகலா ஏன் அமைதிகாக்கிறார்… என்ன திட்டமிருக்கு?