கமல் நகர்த்தும் காய்கள்.. அதிர்ச்சியில் உறையும் ஸ்டாலின்

 

கமல் நகர்த்தும் காய்கள்.. அதிர்ச்சியில் உறையும் ஸ்டாலின்

திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கிறது என்ற பேச்சு இருந்து வரும் நிலையில், நடந்து முடிந்த ம.நீ.,ம. பொதுக்குழுவில் முதல்வர் வேட்பாளர் என்று கமல்ஹாசனை அறிவித்தது திமுகவினரை அதிரவைத்திருக்கிறது. கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சியோடுதான் கூட்டணி என்றும் பொதுக்குழுவில் முடிவெடுத்திருக்கிறார்கள்.

கமல் நகர்த்தும் காய்கள்.. அதிர்ச்சியில் உறையும் ஸ்டாலின்

இதனால் திமுகவுடன் ம.நீ.ம. கூட்டணி இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. எப்படியும் தான் முதல்வர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்றுதான் ஸ்டாலின் இந்த அளவுக்கு போராடுகிறார். அதற்காகத்தான் கூட்டணி அமைப்பதும். முதல்வர் வேட்பாளர் கமல் என்றால், முதலுக்கே மோசம் ஆகிவிடாதா என்ன? அதனால்தான் கமலுடன் கூட்டணி இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் திமுகவினர்.

கமல் நகர்த்தும் காய்கள்.. அதிர்ச்சியில் உறையும் ஸ்டாலின்

இது ஒருபுறம் இருக்க, தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் தனது தலைமையில் கூட்டணி அமைக்கவும் வியூகம் வகுத்து வருகிறார் கமல் என்கிறார்கள் ம.நீ.மய்யத்தினர்.

கமலுடன் கைகோர்க்க இப்போதே தயாராக இருக்குதாம் ஆத் ஆத்மி. ஆனால், கமல் எதிர்பார்க்கும் அந்த ரெண்டு கட்சிகள் வேறு. கமலுக்கு தோதாக, அந்த ரெண்டு கட்சிகளும் விரைவில் திமுகவில் இருந்து வெளியேறிவிடுமென்ற பேச்சும் இருக்கிறது.

கமல் நகர்த்தும் காய்கள்.. அதிர்ச்சியில் உறையும் ஸ்டாலின்

ஐபேக்கின் ஆலோசனையை கேட்டு ஸ்டாலின் எடுக்கும் முடிவுகளால் கூட்டணியினர் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்றும், கம்யூனிஸ்டுகள் விரைவில் வெளியேற வாய்ப்பிருப்பதாகவும் , வெளியேறும் கம்யூனிஸ்டுகளை தன்பக்கம் இழுக்க கமல் காய் நகர்த்துவதாகவும் பேச்சு இருக்கிறது. தொகுதியில் உடன்பாடு எட்டாமல் காங்கிரசும் வெளியேறிவிட்டால் நிச்சயம் கமலுடன் தான் கைகோர்க்கும். கே.எஸ். அழகிரியும், கார்த்தி சிதம்பரமும் கமல்ஹாசனை தங்களது கூட்டணிக்கு வரவேண்டுமென்று வலியுறுத்தி வந்தனர். அதனால் அவர்கள் கமலுடன் கைகோர்க்க தயங்கப்போவதில்லை.

கமல் நகர்த்தும் காய்கள்.. அதிர்ச்சியில் உறையும் ஸ்டாலின்

ஆம் ஆத்மி, காங்கிரஸ், கம்யூன்ஸ்டுகளுடன் வேறு சிலகட்சிகளையும் இணைத்து வலுவான மூன்றாவது அணி அமைக்க கமல்ஹாசன் நகர்த்தும் காய்களால் அதிச்சியில் உறைந்து நிற்கிறாராம் ஸ்டாலின்.