பித்தளை வேல் என்பதால் தான் கனிமொழி வாங்கவில்லை – எச்.ராஜா

 

பித்தளை வேல் என்பதால் தான் கனிமொழி வாங்கவில்லை – எச்.ராஜா

பாஜக தமிழ்நாட்டில் ஒன்றும் சாதிக்க முடியாது என சொல்பவர்களுக்கு, ஸ்டாலின், திருமாவளவன் என எல்லா இந்து விரோதிகளையும் “வேல்” தூக்க வச்சிட்டோமே , அதுவே சாதனைதானே என்றார் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர். அவர் மேலும், அடுத்து உதயநிதி அங்கப்பிரதட்சணமும், கனிமொழி தீச்சட்டியும் தூக்குவாங்க பாருங்க என்றார்.

பித்தளை வேல் என்பதால் தான் கனிமொழி வாங்கவில்லை – எச்.ராஜா

உதயநிதி அங்கப்பிரதட்சணம் செய்யாவிட்டாலும் ஸ்டாலினுக்கு கொடுத்தது மாதிரியே அவருக்கு தொண்டர்கள் வேல் கொடுக்க அதை வாங்கி போஸ் கொடுத்தார். ஆனால், கனிமொழியிடம் கொடுத்த வேலினை அவர் வாங்க மறுத்துவிட்டார்.

மதுரையில் இரண்டு நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கனிமொழி எம்.பி., சிம்மக்கல் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது, வடக்குமாசி வீதி திமுக வட்ட செயலாளர் பாலு, சரவணன் ஆகியோர், வெண்கலத்தால் ஆன வேல் கொண்டு வந்து கனிமொழிடம் கொடுத்தனர்.

பித்தளை வேல் என்பதால் தான் கனிமொழி வாங்கவில்லை – எச்.ராஜா

அப்போது கனிமொழி, டென்சன் ஆனார். ஏதோ அருவருப்பான ஒரு பொருளை கொண்டு வந்து நீட்டுவது போலவே முகத்தை வைத்துக்கொண்டார். கடைசிவரைக்கும் அந்த வேலினை கனிமொழி கையில் வாங்கிக்கொள்ளவே இல்லை. தொண்டர்களிடையே இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பித்தளை வேல் என்பதால் தான் கனிமொழி வாங்கவில்லை – எச்.ராஜா

துர்க்கா ஸ்டாலுனும், உதயநிதி ஸ்டாலினும் கோவில்களில் வணங்கிவிட்டு விபூதி பூசிக்கொள்கிறார்கள். ஆனால், ஸ்டாலினோ விபூதியை வாங்கி கீழே கொட்டுகிறார். டால்கம் பவுடர் மாதிரி கழுத்தில் பூசிக்கொள்கிறார். ஆனால் அவரே கூட திருத்தணியில் தொண்டர்கள் வேல் கொடுத்த போது வாங்கிக்கொண்டார். ஆனால், கனிமொழி வேல் வாங்க மறுத்திருக்கிறார்.

திமுகவின் இந்த நாத்திக, ஆத்திக குழப்பத்தைத்தான் இரட்டை வேடம் என்றும், வேல் தூக்கியதை தேர்தல் நாடகம் என்றும் பாஜகவினர் விமர்சித்து வரும்நிலையில், பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, ‘’வெள்ளி வேல் கொடுத்திருந்தால் கனிமொழி வாங்கி இருப்பார். பித்தளை வேல் கொடுத்ததால் தான் வாங்கவில்லை’’ என்று சாடியிருக்கிறார்.