இணைந்தால் பங்கு – இல்லையேல் சங்கு: சசிகலா வரவேற்பில் கவனத்தை ஈர்த்த போஸ்டர்கள்

 

இணைந்தால் பங்கு – இல்லையேல் சங்கு: சசிகலா வரவேற்பில் கவனத்தை ஈர்த்த போஸ்டர்கள்

கர்நாடகாவில் இருந்து சென்னை வரும் வரையிலும் சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகிறார்கள்.

சசிகலாவை வரவேற்று ஏராளமான போஸ்டர்கள், பேனர்கள், கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் இரண்டு பேனர்கள் அதிகம் கவனம் ஈர்த்துள்ளன.

இணைந்தால் பங்கு – இல்லையேல் சங்கு: சசிகலா வரவேற்பில் கவனத்தை ஈர்த்த போஸ்டர்கள்

இணைந்தால் பங்கு – இல்லையேல் சங்கு என்ற வாசகத்துடன் இருந்த பேனர் கட்சியினரிடையேயும் மக்களிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டியை சேர்ந்த ஒருங்கிணைந்த அதிமுக நிர்வாகிகள் இந்த பேனரை வைத்திருந்தனர்.

இணைந்தால் பங்கு – இல்லையேல் சங்கு: சசிகலா வரவேற்பில் கவனத்தை ஈர்த்த போஸ்டர்கள்

வரம் கொடுத்த சசிகலா தலையிலேயே கை வைத்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி என்று திமுகவினர் விமர்சித்து வரும் நிலையில், சின்னம்மாவுக்கு துரொகம் செய்துவிட்டார் என்று அமமுகவினரும் சொல்லி வரும் நிலையில், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது என்பது நூறு சதவிகிதம் கிடையாது என்று உறூதியாகவும் அழுத்தமாகவும் சொல்லி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இந்நிலையில், எடப்பாடியின் தொகுதியினரே, ‘’துரோகத்தை அழிக்க வந்த துர்க்கையே வருக!வருக!வருக!’’ என்று எடப்பாடி தொகுதியினர் வைத்திருந்த பேனர் பரபரப்பை ஏற்படுத்தியது.