சிக்குனா சிதைச்சு விட்டுடுவேன்; கொன்னுடுவேன்… ரா.கா., க.சு.வை எச்சரித்த சீமான்

 

சிக்குனா சிதைச்சு விட்டுடுவேன்; கொன்னுடுவேன்… ரா.கா., க.சு.வை எச்சரித்த சீமான்

நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கல்யாணசுந்தரம் மற்றும் ராஜீவ் காந்தி இருவரும் அக்கட்சியில் இருந்து விலகிவிட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்தார். மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார். திதி.மு.க.வில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு, தி.மு.க.வில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க.வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளராக ராஜீவ் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிக்குனா சிதைச்சு விட்டுடுவேன்; கொன்னுடுவேன்… ரா.கா., க.சு.வை எச்சரித்த சீமான்

நாம் தமிழர் கட்சியில் இருந்து இருவரின் வெளியேற்றம் குறித்தும், இருவரும் வெளியே சென்று சீமான் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளால் வெகுண்டெழுந்த சீமான், இருவருக்கும் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

’’கட்சிக்குள்ள அவன் சரியில்ல, அவன நீக்கிடுங்க இவன நீக்கிடுங்கன்னு சொல்லுவாங்க,. எனக்கு மட்டும் உங்க எல்லாரையும் பிடிக்குது. உங்களுக்கு மட்டும் ஏன் ஒருத்தனை ஒருத்தனை பிடிக்கல. சீமான் யோசிக்கறதே இல்லன்னு சொல்லுவாங்க. ஆழ்ந்து ஒருமுறைக்கு பலமுறை யோசித்துதான் முடிவெடுப்பேன். இது சரிப்பட்டு வரும்; வராதுன்னு தெரியும். அதனால அமைதியா இருப்பேன். அதனால, சாதாரண ஆள் இந்த சீமான் என்று எவனும் கருதிவிட முடியாது.

சிக்குனா சிதைச்சு விட்டுடுவேன்; கொன்னுடுவேன்… ரா.கா., க.சு.வை எச்சரித்த சீமான்

நாகரீகம் கருதி வெளியே விட்டேன். இல்லேன்னா வீட்டுக்குள்ள வச்சு பூட்டி பச்சைமட்டையை எடுத்து வெளுத்து விட்டிருப்பேன். அயோக்கியப்பயலுகளே… இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல.. ஒரு நாள்..சிக்குனா சிதைச்சு விட்டுடுவேன். கொன்னுடுவேன்… எனக்கு இருக்குற கோபத்துக்கு.. அயோக்கியப்பயலுக… பேசக்கத்துக்கொடுத்து, மேடையில போய் நில்லு, அங்க நில்லு, இங்க நில்லுன்னு சொல்லி, முகங்காட்டி விட்டா, அதை பயன்படுத்தி வியாபாரம் பண்ணி பிழைக்கிறது. கோபத்துல இருக்கேன். ’’என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

சிக்குனா சிதைச்சு விட்டுடுவேன்; கொன்னுடுவேன்… ரா.கா., க.சு.வை எச்சரித்த சீமான்

சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் கடந்த 1ம் தேதி அன்று கூடுவாஞ்சேரி, என்.பி.சி. திருமண மண்டபத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசியபோது சீமான் எச்சரித்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

சிக்குனா சிதைச்சு விட்டுடுவேன்; கொன்னுடுவேன்… ரா.கா., க.சு.வை எச்சரித்த சீமான்