சசிகலா வருகையில் திடீர் மாற்றம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

 

சசிகலா வருகையில் திடீர் மாற்றம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையாகி, கொரோனா சிகிச்சை முடிந்து பெங்களூரு ரிசார்ட்டில் ஓய்வெடுத்து வரும் சசிகலா வரும் 8ம் தேதி அன்று தமிழகம் வருகிறார். காலை 9 மணிக்கு கர்நாடகாவில் இருந்து புறப்படுகிறார்.

7ம் தேதி அன்று வருவதாக இருந்த நிலையில் திடீரென்று அவரது வருகை 8ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

சசிகலா வருகையில் திடீர் மாற்றம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

இதுகுறித்து, ‘’தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் வருகிற 7 ஆம் தேதிக்கு பதிலாக 8.2.2021 திங்கள்கிழமை அன்று காலை 9 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருகிறார்கள்’’ என்று அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

முன்னதாக டிடிவி தினகரன், ’’தமிழக எல்லையில் இருந்து சென்னை வருகிற வரை வழி நெடுக அவர்களுக்கு அளிக்கப்படுகிற வரவேற்பை, பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எந்தவித இடையூறும் இன்றி அமைத்துக்கொள்ள வேண்டும். கொரோனா கால வழிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து, தியாகத்தலைவி சின்னம்மா அவர்களுக்கும் உங்கள் அன்புச் சகோதரனாகிய எனக்கும் எவ்வித அவப்பெயரும் ஏற்படா வண்ணம் கழக உடன்பிறப்புகள் பங்கேற்றிட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’’ என்றும்,

சசிகலா வருகையில் திடீர் மாற்றம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

’’புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த இயக்கத்தை மீட்டெடுத்திடவும் அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்திடவும் வரும் தேர்தலில் தீயசக்தியான திமுகவை தலையெடுக்கவிடாமல் செய்திடவும் அம்மா அவர்களின் உண்மை தொண்டர்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து செயல்படுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.