இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ – இசை ரசிகர்கள் நிம்மதி!

 

இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ – இசை ரசிகர்கள் நிம்மதி!

சென்னை பிரசாத் ஸ்டூடியோவுக்கும் இளையராவுக்கும் உள்ள பந்தம் சொற்களுக்குள் அடங்காது. ஸ்டூவியோவில் உள்ள, இளையராஜாவின் அமைதியான அறையில் இருந்துதான் நம் காதுகளில் தேனாக பாயும் பல ஆயிரம் பாடல்கள் காற்றில் ஏறின. இசை மெட்டுகளை,மொட்டாக மலரச் செய்த பிரசாத் ஸ்டூடியோவில், ராசாவின் வருகைக்காக பல நூறு தயாரிப்பாளர்கள் காத்துகிடந்த காலமெல்லாம் இருக்கிறது. சுமார் 40 ஆண்டுகளாக அங்கிருந்து தந்து ராஜபாட்டையை நடத்தி வந்தார் இசைஞானி.

இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ – இசை ரசிகர்கள் நிம்மதி!

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் பிரசாத் ஸ்டூடியோ உரிமை, வாரிசுகளின் கைகளுக்கு மாறியது. அதன்பின்னர், புதிய நிர்வாகிகள் இளையராஜாவுக்கு பல நெருக்கடி அளித்து ஸ்டூடியோவை காலி செய்ய வைத்தனர். இதனால் மன உளைச்சல் அடைந்த இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஸ்டூடியோவில் உள்ள பொருட்களை எடுக்கவும் அனுமதி அளிக்கவும், அங்கு சென்று தியானம் செய்ய தன்னை அனுமதிக்க அறிவுறுத்துமாறும் நீதிமன்றத்தில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் இளையராஜா, தங்கள் மீது தொடுத்துள்ள வழக்குகளை திரும்ப பெற்றால் அவர் பொருட்களை எடுக்க அனுமதி அளிக்கப்பதாக பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள் தெரிவித்தனர். அதற்கு இளையராஜா ஒப்புதல் அளித்த நிலையில், அவர் இருந்த பிரசாத் ஸ்டூடியோ கட்டிடம் இடிக்கப்பட்டு அவர் பொருட்கள் குப்பை போல் போடப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் மனம் உடைந்த இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ செல்லும் மனநிலையை மாற்றிக் கொண்டார். இப்படியாக பிரசாத் ஸ்டூடியோவுக்கும் இசைஞானிக்குமான 40 ஆண்டு பந்தம் முடிவுக்கு வந்தது.

இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ – இசை ரசிகர்கள் நிம்மதி!

இந்த நிலையில் சென்னையில் தனக்காக புதிய ஸ்டுடியோவை இளையராஜா உருவாக்கியுள்ளார். கோடம்பாக்கத்தில் உள்ள பழைய எம்.எம். தியேட்டரை வாங்கி, அங்கு பல மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய இசைக் கோர்ப்பு கூடம் உருவாகியுள்ளது. இசை ராஜாவின் ராஜாங்கம் இனி இங்கிருந்துதான் தொடங்கும் என்பதில், இசை ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள ஸ்டூவிடியோவில், முதல் பாடலாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கான பாடல் இடம்பெற்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து, தமிழ் நெஞ்சங்களுக்கு இசைத் தென்றல்களால் தாலாட்டு பாடிய இளையராஜா, புதிய இடத்தில் இருந்தும் இசை உலகிற்கு புதிய உச்சங்களை அளிப்பார் என நம்பலாம்.