நாறும் இந்தியா… விசிக எம்.பி. ரவிக்குமார் ஆத்திரம்

 

நாறும் இந்தியா… விசிக எம்.பி. ரவிக்குமார் ஆத்திரம்

மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு இந்தியாவில் தடை இருந்தாலும் இன்னும் இந்த கொடுமை நடைமுறையில் தான் இருக்கிறது. துப்புரவு பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றிசாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழக்கின்றனர்.

நாறும் இந்தியா… விசிக எம்.பி. ரவிக்குமார் ஆத்திரம்

கழுவுநீர் தொட்டி, பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது உயிரழந்த துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2வது இடத்தில் இருக்கிறது.முதலிடத்தில் உத்தரபிரதேசம் இருக்கிறது. 52 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு 2 ஆவது இடம்!

டெல்லி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 36 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா நான்காவது இடத்தில் உள்ளது. 34 பேர் உயிரிழந்துள்ளனர். அரியானா மற்றும் குஜராத் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றன. தலா 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்பும் மாவட்ட எம்.பி. ரவிக்குமார், ‘’நாறும் இந்தியா.. சாக்கடை சுத்தம் செய்வதில் ஈடுபட்ட தொழிலாளிகள் 340 பேர் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் உயிரிழப்பு. தமிழ்நாட்டில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு 2 ஆவது இடம்! ‘தூய்மை இந்தியா’ அல்ல, நாறும் இந்தியா! ’’என்கிறார்.