21 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு!
தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகளில் 21 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர்கிறது
கொரோனா பெருந்தொற்றால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் 10 சதவீதம் வரையில் கட்டணம் உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
அந்த வகையில் கொடைரோடு(திண்டுக்கல்), வேலங்செட்டியூர் (கரூர்), பாளையம் (தருமபுரி), விஜயமங்கலம்(குமாரபாளையம்), எலியார்பதி (மதுரை), புதூர் பாண்டியாபுரம்(விருதுநகர்), ராசம்பாளையம் (நாமக்கல்), ஓமலூர், சமயபுரம் (திருச்சி), வீரசோழபுரம்(சேலம்), மேட்டுப்பட்டி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது.
இதை தொடர்ந்து வாழவந்தான் கோட்டை (தஞ்சை), நத்தக்கரை (சேலம்), மணவாசி (கரூர்), வைகுந்தம் (சேலம்), திருப்பராயத்துறை , பொன்னம்பலப்பட்டி(திருச்சி,) திருமாந்துறை (விழுப்புரம்), விக்கிரவாண்டி, செங்குறிஞ்சி, மொரட்டாண்டி (விழுப்புரம்) ஆகிய சுங்கச்சாவடிகளிலும் நாளை முதல் கட்டணம் உயருகிறது.