மகாராஷ்டிரா கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

 

மகாராஷ்டிரா கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியில் இருந்த ஜிலானி அடுக்குமாடி குடியிருப்பு நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த கட்டடம் மோசமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்த 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர், படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகாராஷ்டிரா கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

மேலும், இன்று காலை வரையில் 18 சடலங்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி இருந்த மேலும் 3 பேரின் சடலம் மீட்கப்பட்டிருப்பதால் பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இரண்டாம் நாளாக அங்கு மீட்புப் பணி தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.