அதிமுகவுக்குள் சலசலப்பு- கட்சியை கைப்பற்றுவாரா சசிகலா?

 

அதிமுகவுக்குள் சலசலப்பு- கட்சியை கைப்பற்றுவாரா சசிகலா?

சசிகலாவின் வருகையினால் அதிமுகவில் நிலவும் அடுத்தடுத்த குழப்பங்களால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா இன்னும் சில தினங்களில் தமிழகம் வர இருக்கிறார். சசிகலாவின் வருகையை முன்னிட்டு அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டி வருகிறார்கள்.

அதிமுகவுக்குள் சலசலப்பு- கட்சியை கைப்பற்றுவாரா சசிகலா?

அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களே வருக, வருக! என்று திருநெல்வே மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்றத்தின் மாநகர் மாவட்ட இணை செயலாளர் சுப்பிரமணிய ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்தனர் ஈபிஎஸ்சும், ஓபிஎஸ்சும்.

திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் சசிகலா வருகையை வரவேற்கும் விதமாக, ‘33 ஆண்டுகள் டாக்டர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவோடு தவ வாழ்க்கை வாழ்ந்த அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக’ என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதிமுகவுக்குள் சலசலப்பு- கட்சியை கைப்பற்றுவாரா சசிகலா?

திருச்சியை தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவாக தேனியிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுக ஆண்டிபட்டி ஒன்றிய இளைஞரணி தலைவர் சின்னராஜா சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில், தமிழ் நாட்டை வழிநடத்த வருகைதரும் அதிமுக கழகத்தின் பொதுச்செயலாளர், தியாகத்தின் மறு உருவம் எங்களின் ராஜமாதாவே வருக! வருக! ” என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுக்குள் சலசலப்பு- கட்சியை கைப்பற்றுவாரா சசிகலா?

சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய சுப்ரமணியராஜா, அண்ணாதுரை ஆகிய 2 பேரும் ஏற்கனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு அதிமுக நிர்வாகி சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போஸ்டர் ஒட்டியவர்களை மட்டும் நீக்கம் செய்து வரும் அதிமுக தலைமை, சசிகலாவுக்கு வாழ்த்து சொன்னவர்களையும், சசிகலாவின் வருகையை வரவேற்றவர்களையும் ஏன் கட்சியை விட்டு நீக்கவில்லை? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சசிகலாவுக்கு பலரும் போஸ்டர் அடித்து வருவதால், இரட்டை தலைமையை விரும்புகிறதா அதிமுக? என்ற கேள்வியும் எழுத்தான் செய்கிறது.

அமைச்சர் செல்லூர்ராஜூ, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட பலரும் சசிகலாவின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். வாழ்த்துசொன்ன ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ஆகியோரை ஏன் இன்னமும் கட்சியை விட்டு நீக்கவில்லை என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

சசிகலாவுக்கு ஆதரவுக்குரல் எழுப்புவோரை எல்லாம் தொடர்ந்து இப்படி நீக்கிக்கொண்டே போனால் கட்சியின் நிலைமைதான் என்னாவது? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

அதிமுகவுக்குள் சலசலப்பு- கட்சியை கைப்பற்றுவாரா சசிகலா?

போஸ்டர் ஒட்டியவர்களை எல்லாம் நீக்கும் அதிகாரத்தில் இருக்கும் ஓபிஎஸ் மகனே சசிகலாவுக்கு வாழ்த்து சொல்வதால், கட்சியை கைப்பற்றுவாரா சசிகலா? என்று அதிமுகவுக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.