மீண்டும் திமுகவில் சேர நூல் விடும் அழகிரி!

 

மீண்டும் திமுகவில் சேர நூல் விடும் அழகிரி!

அழகிரி பிறந்த நாள் என்றாலே மதுரையை போஸ்டரால் அலங்கரித்து விடுவார்கள் அவரது ஆதரவாளர்கள். இந்த வருடம் கட்சி தொடங்குவார் என்ற எதிர்ப்பார்ப்பு இருப்பதால் கூடுதலாகவே அதகளம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

மீண்டும் திமுகவில் சேர நூல் விடும் அழகிரி!

திமுகவில் தன்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளாததால், தனது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் மு.க.அழகிரி. இந்நிலையில் வரும் 30ம்தேதி அழகிரி பிறந்தநாள் வருவதால், அந்நாளில் அழகிரி தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அதே நேரத்தில், திமுகவில் மீண்டும் அழகிரியை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பிலும் இருக்கிறார்கள்.

மீண்டும் திமுகவில் சேர நூல் விடும் அழகிரி!

அதனால்தான், ‘’ஐபேக் தேவையில்லை. ஆட்சியை அமைக்க கலைஞர் மூளை உங்கள் அண்ணன் அஞ்சாநெஞ்சர் போதும்..’’ என்றும், ‘’சேர்த்தால் உதயம் தவிர்த்தால் அஸ்தமனம்’’ என்றும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

மீண்டும் திமுகவில் சேரத்தான் அழகிரியும் துடுக்கிறார் போலிருக்கிறது. அவரின் மனதை அறிந்துதான் ஆதரவாளர்களும் இந்த போஸ்டரை அடித்திருப்பதாக தெரிகிறது.

அழகிரி ஆதரவாளர்களின் இந்த போஸ்டர்கள் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.