விஜய்சேதுபதியாவது பட்டாகத்திதான்.. இந்த இளைஞர் துப்பாக்கியால் வெட்டினார்!

 

விஜய்சேதுபதியாவது பட்டாகத்திதான்..  இந்த இளைஞர் துப்பாக்கியால் வெட்டினார்!

அட்டகத்தியால் கேக் வெட்டியது போக பிளாஸ்டிக் கத்தியாலும் கேக் வெட்டி வருகிறார்கள். இதில் பலரும் நிஜ கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி வருகிறார்கள். இதன் உச்சமாக பட்டாகத்தியால் கேக் வெட்டி, பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள்.

விஜய்சேதுபதியாவது பட்டாகத்திதான்..  இந்த இளைஞர் துப்பாக்கியால் வெட்டினார்!

சென்னையில் ரவுடி பினுவை தொடர்ந்து சில கல்லூரி மாணவர்களும் பட்டாகத்தியால் கேக் வெட்டி அந்த வீடியோவினை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினர். பின்னர் போலீசாரால் அவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.

கடந்த வாரம் நடிகர் விஜய்சேதுபதியும் தனது பிறந்தநாளில் பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையங்களில் வெளியாகி சர்ச்சை ஆனது. பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், விஜய் சேதுபதி வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.

விஜய்சேதுபதியாவது பட்டாகத்திதான்..  இந்த இளைஞர் துப்பாக்கியால் வெட்டினார்!

இந்நிலையில் துப்பாக்கியால் கேக் வெட்டிபிறந்தநாளை கொண்டாடிய இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடன் உடன் இருந்த நண்பர்களில் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

துப்பாக்கியால் கேக் வெட்டி கொண்டாடும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்ததும், அதுகுறித்து விசாரணையில் அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.

உபியில் ஹப்பூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்தது என்பது கண்டறியப்பட்டு, இருவரை கைது செய்திருக்கிறது ஹப்பூர் போலீஸ். கேக் வெட்ட பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

துப்பாக்கியால் கேக் வெட்டியது குற்றம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தாலும், துப்பாக்கி எப்படி கிடைத்தது என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.