நடிகர் சூர்யாவின் உறவினர் தொடங்கிய சினிமா தியேட்டர்

 

நடிகர் சூர்யாவின் உறவினர் தொடங்கிய சினிமா தியேட்டர்

நடிகர் சூர்யாவின் தூரத்து உறவினர் ஞானவேல்ராஜா. சூர்யாவின் உதவியால் ‘ஸ்டூடியோ கிரீன்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்கி, ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார்.

நடிகர் சூர்யாவின் உறவினர் தொடங்கிய சினிமா தியேட்டர்

தொடர்ந்து பருத்தி வீரன், சிங்கம், சிறுத்தை, நான் மகான் அல்ல, மெட்ராஸ், கொம்பன்,பிரியாணி, தானா சேர்ந்த கூட்டம் என்று தொடர்ந்து சூர்யா, கார்த்தியை வைத்து தயாரித்து வந்த ஞானவேல்ராஜா, ஆர்யா உள்ளிட்ட பிற ஹீரோக்களையும் வைத்து படங்கள் தயாரித்து வந்தார். தற்போது சிம்புவை வைத்து ‘பத்து தல’ படத்தை தயாரித்து வருகிறார்.

நடிகர் சூர்யாவின் உறவினர் தொடங்கிய சினிமா தியேட்டர்

திரைப்பட தயாரிப்பாளர் என்பதோடு அல்லாமல் விநியோகஸ்தராகவும் இருந்து வருகிறார். அட்டகத்தியில் தொடங்கி இருட்டு அறையில் முரட்டு குத்து வரைக்கும் நிறைய படங்களை வாங்கி விநியோகித்து வருகிறார்.

நடிகர் சூர்யாவின் உறவினர் தொடங்கிய சினிமா தியேட்டர்

தயாரிப்பாளர், விநியோகஸ்தர் தாண்டி தயாரிப்பாளர் சங்கத்திலும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர், தற்போது சினிமா தியேட்டர் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார்.

நடிகர் சூர்யாவின் உறவினர் தொடங்கிய சினிமா தியேட்டர்

சென்னையில் பாடியில் ‘கிரீன் சினிமாஸ்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த தியேட்டரில் இரண்டு ஸ்கிரீன் உள்ளது. பொங்கல் முதல் தொடங்கப்பட்டிருக்கும் இத்தியேட்டரில் மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

நடிகர் சூர்யாவின் உறவினர் தொடங்கிய சினிமா தியேட்டர்

கார்த்திக், ஆர்யா உள்ளிட்ட பலரும் ஞானவேல்ராஜாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகிறார்கள்.