முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.58 ஆயிரம் நஷ்டம்

 

முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.58 ஆயிரம் நஷ்டம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டது. சென்செக்ஸ் 163 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல் மற்றும் ஸ்டேட் வங்கி உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. கோடக்மகிந்திரா வங்கி பங்கின் விலை எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.

முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.58 ஆயிரம் நஷ்டம்
ஏசியன் பெயிண்ட்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,333 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,934 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 155 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.261.17 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.58 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.58 ஆயிரம் நஷ்டம்
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 163.11 புள்ளிகள் உயர்ந்து 60,048.47 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 30.25 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,853.20 புள்ளிகளில் முடிவுற்றது.