பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி கண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 127 புள்ளிகள் சரிவு…

 

பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி கண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 127 புள்ளிகள் சரிவு…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 127 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று அதிகளவில் விற்பனையானது உள்ளிட்ட காரணங்களால் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் டி.சி.எஸ். மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி கண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 127 புள்ளிகள் சரிவு…
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,717 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,546 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 205 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.256.34 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.80 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி கண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 127 புள்ளிகள் சரிவு…
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 127.31 புள்ளிகள் சரிந்து 58,177.76 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 13.95 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 17,355.30 புள்ளிகளில் முடிவுற்றது.