தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 272 புள்ளிகள் உயர்ந்தது..

 

தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 272 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 272 புள்ளிகள் உயர்ந்தது.

டாடா ஸ்டீல் போன்ற பல நிறுவனங்களின் நிதி முடிவுகள் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற பல காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் ஆட்டோ மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பவர்கிரிட் மற்றும் சன்பார்மா உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 272 புள்ளிகள் உயர்ந்தது..
பஜாஜ் ஆட்டோ

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,653 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,344 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 130 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.210.12 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.43 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 272 புள்ளிகள் உயர்ந்தது..
சென்செக்ஸ்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 272.21 புள்ளிகள் உயர்ந்து 48,949.76 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 106.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,724.80 புள்ளிகளில் முடிவுற்றது.