தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 338 புள்ளிகள் வீழ்ச்சி

 

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 338 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 338 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் இந்த ஏற்றம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை தொடர்ந்து பங்கு வர்த்தகம் இறக்கம் கண்டு இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஓ.என்.ஜி.சி. மற்றும் சன்பார்மா உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 338 புள்ளிகள் வீழ்ச்சி
ஓ.என்.ஜி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,646 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,442 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 160 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.215.74 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.76 ஆயிரம் கோடியை இழந்தனர்.

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 338 புள்ளிகள் வீழ்ச்சி
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 337.78 புள்ளிகள் சரிந்து 49,564.86 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 124.10 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,906.05 புள்ளிகளில் முடிவுற்றது.