சென்செக்ஸ் 341 புள்ளிகள் குறைந்தது… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ. 11 ஆயிரம் கோடி லாபம்..

 

சென்செக்ஸ் 341 புள்ளிகள் குறைந்தது… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ. 11 ஆயிரம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவு கடந்தது. சென்செக்ஸ் 341 புள்ளிகள் குறைந்தது.

லாப நோக்கில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்தது, வர்த்தகத்தின் இடையே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிந்தது போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், என்.டி.பி.சி. மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. கோடக் மகிந்திரா வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. மற்றும் 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 341 புள்ளிகள் குறைந்தது… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ. 11 ஆயிரம் கோடி லாபம்..
என்.டி.பி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,842 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,205 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 192 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.213.40 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ. 11 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 341 புள்ளிகள் குறைந்தது… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ. 11 ஆயிரம் கோடி லாபம்..
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 340.60 புள்ளிகள் சரிந்து 49,161.81 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 91.60 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,850.75 புள்ளிகளில் முடிவுற்றது.