தொடர்ந்து 3வது நாளாக சரிவு… சென்செக்ஸ் 562 புள்ளிகள் வீழ்ச்சி

 

தொடர்ந்து 3வது நாளாக சரிவு… சென்செக்ஸ் 562 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 562 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பொதுத்துறை வங்கிகளின் பங்கு விலை கடுமையாக குறைந்தது. முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று தள்ளியது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஐ.டி.சி. மற்றும் எச்.டி.எப்.சி. உள்பட மொத்தம் 4 நிறுவன பங்குகளின் விலை மட்டும் உயர்ந்தது. அதேவேளையில், ஓ.என்.ஜி.சி. மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 26 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 3வது நாளாக சரிவு… சென்செக்ஸ் 562 புள்ளிகள் வீழ்ச்சி
ஐ.டி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 842 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,143 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 140 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.203.68 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.3.60 லட்சம் கோடியை இழந்தனர்.

தொடர்ந்து 3வது நாளாக சரிவு… சென்செக்ஸ் 562 புள்ளிகள் வீழ்ச்சி
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 562.34 புள்ளிகள் சரிந்து 49,801.62 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 189.15 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,721.30 புள்ளிகளில் முடிவுற்றது.