சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி லாபம்

 

சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி லாபம்

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்க பெடரல் வங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற தகவல் காரணமாக இன்று இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகம் படிப்படியாக ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், என்.டி.பி.சி. மற்றும் டைட்டன் உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மாருதி மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி லாபம்
என்.டி.பி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,049 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,256 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 158 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.228.98 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.54 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி லாபம்
சென்செக்ஸ்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 230.01 புள்ளிகள் உயர்ந்து 52,574.46 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 63.15 புள்ளிகள் ஏற்றம் கண்டு 15,746.50 புள்ளிகளில் முடிவுற்றது.