இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே நடந்த பங்கு வர்த்தகம்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.63 ஆயிரம் கோடி லாபம்

 

இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே நடந்த பங்கு வர்த்தகம்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.63 ஆயிரம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 164 புள்ளிகள் குறைந்தது.

பக்ரீத்தை முன்னிட்டு கடந்த புதன்கிழமையன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை. இதனால் இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரத்தின் முதல் 2 தினங்களில் பங்கு வர்த்தகம் அடி வாங்கியது. நேற்றும், இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் களை கட்டியது. முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் மற்றும் சர்வதேச நிலவரங்கள் இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே நடந்த பங்கு வர்த்தகம்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.63 ஆயிரம் கோடி லாபம்
நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.235.12 லட்சம் கோடியாக இருந்தது கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 16) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ..234.49 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.63 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே நடந்த பங்கு வர்த்தகம்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.63 ஆயிரம் கோடி லாபம்
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 164.26 புள்ளிகள் குறைந்து 52,975.80 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 67.35 புள்ளிகள் சரிவு கண்டு 15,856.05 புள்ளிகளில் முடிவுற்றது.