முதலீட்டாளர்களை பதற வைத்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 587 புள்ளிகள் வீழ்ச்சி

 

முதலீட்டாளர்களை பதற வைத்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 587 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 587 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. ஆசியாவின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது, பொருளாதாரம் வீழ்ச்சி காணும் என்ற அச்சம் போன்ற சர்வதேச நிலவரங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், என்.டி.பி.சி. மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 5 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

முதலீட்டாளர்களை பதற வைத்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 587 புள்ளிகள் வீழ்ச்சி
என்.டி.பி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,762 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,562 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 168 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.233.23 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.26 லட்சம் கோடியை இழந்தனர்.

முதலீட்டாளர்களை பதற வைத்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 587 புள்ளிகள் வீழ்ச்சி
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 586.66 புள்ளிகள் சரிந்து 52,553.40 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 171.00 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 15,752.40 புள்ளிகளில் முடிவுற்றது.