பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அடி தூள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.56 லட்சம் கோடி லாபம்..

 

பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அடி தூள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.56 லட்சம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 834 புள்ளிகள் உயர்ந்தது.

2020ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் சீனாவின் பொருளாதாரத்தில் 2.3 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. சியட் உள்பட பல முன்னணி நிறுவனங்களின் நிதி முடிவுகள் சிறப்பாக இருந்தது, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை அதிகரித்து வருவது போன்ற பல்வேறு காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் களை கட்டியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஐ.டி.சி., மகிந்திரா மற்றும் டெக் மகிந்திரா ஆகிய 3 நிறுவன பங்குகளின் விலை மட்டும் குறைந்தது.

பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அடி தூள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.56 லட்சம் கோடி லாபம்..
டெக் மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,119 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 879 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 148 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.196.23 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.56 லட்சம் கோடி லாபம் கிடைத்தது
.

பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அடி தூள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.56 லட்சம் கோடி லாபம்..
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 834.02 புள்ளிகள் உயர்ந்து 49,398.29 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 239.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,521.15 புள்ளிகளில் முடிவுற்றது.