பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் – முதலீட்டாளர்களுக்கு ரூ.42 ஆயிரம் கோடி நஷ்டம்!

 

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் – முதலீட்டாளர்களுக்கு ரூ.42 ஆயிரம் கோடி நஷ்டம்!

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்ற இறக்கமாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.42 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் புதிய உச்சத்தை தொட்டது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகம் தொடர்ந்து சரிவு காண தொடங்கியது. இறுதியில் சென்செக்ஸ் சரிவுடனும், நிப்டி சிறிய ஏற்றத்துடனும் முடிந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் – முதலீட்டாளர்களுக்கு ரூ.42 ஆயிரம் கோடி நஷ்டம்!
பஜாஜ் பைனான்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,238 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,826 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 148 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.197.04 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.42 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் – முதலீட்டாளர்களுக்கு ரூ.42 ஆயிரம் கோடி நஷ்டம்!
முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 24.79 புள்ளிகள் குறைந்து 49,492.32 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 1.40 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,564.85 புள்ளிகளில் முடிவுற்றது.