புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 458 புள்ளிகள் உயர்ந்தது…

 

புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 458 புள்ளிகள் உயர்ந்தது…

தொடர்ந்து 3வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.76 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் காலையில் உயர்வுடன் தொடங்கியது. பின்னர் சரிவு கண்டபோதிலும் மீண்டும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. பல நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, மத்திய பட்ஜெட் போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் பவர் கிரிட் உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மாருதி மற்றும் அல்ட்ராடெக்சிமெண்ட் உள்பட 7 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 458 புள்ளிகள் உயர்ந்தது…
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,786 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,202 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 156 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.198.47 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.76 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.


.

புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 458 புள்ளிகள் உயர்ந்தது…
பங்கு வர்த்தகம் உயர்வு

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 458.03 புள்ளிகள் உயர்ந்து 50,255.75 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி புள்ளிகள் 142.10 ஏற்றம் கண்டு 14,789.95 புள்ளிகளில் முடிவுற்றது.