சென்செக்ஸ் 13 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.21 ஆயிரம் கோடி நஷ்டம்…

 

சென்செக்ஸ் 13 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.21 ஆயிரம் கோடி நஷ்டம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஒரு நிலையில்லாமல் இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.21 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலைகளில் பங்கு வர்த்தகம் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால் மதியத்துக்கு மேல் பங்கு வர்த்தகத்தில் கடும் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் சென்செக்ஸ் உயர்வுடனும், நிப்டி சரிவுடனும் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஐ.டி.சி. மற்றும் சன்பார்மா உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 13 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.21 ஆயிரம் கோடி நஷ்டம்…
ஐ.டி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,437 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,532 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 165 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.203.91 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.21 ஆயிரம் கோடியை இழந்தனர்.

சென்செக்ஸ் 13 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.21 ஆயிரம் கோடி நஷ்டம்…
மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 12.78 புள்ளிகள் உயர்ந்து 51,544.30 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 10.00 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 15,163.30 புள்ளிகளில் முடிவுற்றது.