‘வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்’ – திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்!

 

‘வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்’ – திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்!

சட்டமன்றத் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் மும்முரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்காக அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு ஆலோசனை நடத்தினார்.

‘வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்’ – திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்!

இந்த நிலையில், 2021 தேர்தலையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் கார்த்திகா வெளியிட்டார். அம்மாவட்டத்தில் மொத்தம் 12.35 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும் புதிதாக 2,481 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்’ – திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்!

வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இன்று முதல் டிச.15ம் தேதி வரை வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் திருத்தம் செய்ய நவ.21,22 மற்றும் டிச.12,13ல் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவை திருத்தம் செய்யப்பட்டு ஜன.20ல் இறுதி பட்டியல் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.