தொடர்ந்து 4வது தினமாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 32 புள்ளிகள் உயர்ந்தது…

 

தொடர்ந்து 4வது தினமாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 32 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 32 புள்ளிகள் அதிகரித்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால் சிறிது நேரத்துக்கு பிறகு பங்கு வர்த்தகத்தில் படிப்படியாக சரிவு ஏற்பட்டது. இருப்பினும் இறுதியில் பங்கு வர்த்தகம் சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் ஆட்டோ மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 4வது தினமாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 32 புள்ளிகள் உயர்ந்தது…
பஜாஜ் ஆட்டோ

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,396 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,544 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 182 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.209.07 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.34 ஆயிம் கோடி லாபம் கிடைத்தது.

தொடர்ந்து 4வது தினமாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 32 புள்ளிகள் உயர்ந்தது…
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 32.10 புள்ளிகள் உயர்ந்து 49,765.94 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 30.35 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,894.90 புள்ளிகளில் முடிவுற்றது.