தொடர்ந்து 2வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 244 புள்ளிகள் குறைந்தது.

 

தொடர்ந்து 2வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 244 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 244 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.


இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால் இந்த ஏற்றம் நீண்ட நிலைக்கவில்லை. பங்கு வர்த்தகம் பின்னர் தொடர் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாக்டர்ரெட்டீஸ் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 2வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 244 புள்ளிகள் குறைந்தது.
பஜாஜ் பைனான்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,613 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,268 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 168 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.201.64 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.13 ஆயிரம் கோடியை இழந்தனர்.

தொடர்ந்து 2வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 244 புள்ளிகள் குறைந்தது.
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 243.62 புள்ளிகள் சரிந்து 47,705.80 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 63.05 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,296.40 புள்ளிகளில் முடிவுற்றது.