பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை… 3 தினங்களில் ரூ.5.95 லட்சம் கோடி லாபம்.. முதலீட்டாளர்கள் ஹேப்பி

 

பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை… 3 தினங்களில் ரூ.5.95 லட்சம் கோடி லாபம்.. முதலீட்டாளர்கள் ஹேப்பி

3 தினங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஒட்டு மொத்த அளவில் சென்செக்ஸ் 1,021 புள்ளிகள் உயர்ந்தது.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமையன்று பங்குச் சந்தைகள் இயங்கவில்லை. புனித வெள்ளியை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாரம் 3 தினங்கள் மட்டுமே வர்த்தகம் நடைபெற்றது. புதன்கிழமையை தவிர்த்து மற்ற இரண்டு தினங்களிலும் (செவ்வாய், வியாழன்) பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்வது குறைந்தது, உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின. அதேசமயம் நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதும் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை… 3 தினங்களில் ரூ.5.95 லட்சம் கோடி லாபம்.. முதலீட்டாளர்கள் ஹேப்பி
விடுமுறை

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.207.24 லட்சம் கோடியாக உயர்ந்தது கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 26) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.201.29 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.5.95 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை… 3 தினங்களில் ரூ.5.95 லட்சம் கோடி லாபம்.. முதலீட்டாளர்கள் ஹேப்பி
கொரோனா வைரஸ் பரிசோதனை

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,021.33 புள்ளிகள் உயர்ந்து 50,029.83 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 360.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,867.35 புள்ளிகளில் முடிவுற்றது.